;
Athirady Tamil News

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட இஞ்சி, கஜூ கடற்படையினரால் பறிமுதல்

0

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இஞ்சி மற்றும் கஜு என்பன இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு – காங்கேசன்துறைக்கு நேற்று அதிகாலை (08.04.2024) அருகில் முச்சக்கரவண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட போதே கடற்படையினரால் மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த கைது நடவடிக்கையின் போது சுமார் 250 கிலோகிராம் இஞ்சி மற்றும் 50 கிலோகிராம் கஜூ என்பன அடங்கியுள்ளன.

மேலதிக விசாரணை
அதேநேரம், இவை கடற்படையினரால் பலாலிப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.