;
Athirady Tamil News

காதலி உயிரிழந்து 50வது நாளில் காதலனும் உயிர்மாய்ப்பு – யாழில் துயரம்!

0

காதலி ஒருவர் தூக்கிட்டு இறந்து 50வது நாளான நேற்றைய தினம் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்காவத்தை, துர்க்காபுரம், தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த கதிர்காமலிங்கம் கோபிசன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இந்நிலையில் குறித்த இளைஞன் இன்றையதினம் மதியம் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.