;
Athirady Tamil News

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.கணேசராஜா பதவி உயர்வு

0

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேசராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா சர்வதேச மனித உரிமைகள் விருதினை பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து முதுகலைப் பட்டம், மூன்று முதுகலை டிப்ளோமோ, இரண்டு டிப்ளோமோ, மூன்று சர்வதேச மனித உரிமை விருதுகள் போன்ற விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

பதவியேற்பு விழா
அத்துடன் சர்வதேச நீதியரசர்கள் ஆணைக் குழுவினால் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வரும்”மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சிறந்த பங்களிப்பிற்காக” என்ற விருதிணையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நீதிபதி எம்.கணேசராஜாவின் பதவியேற்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறயிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.