;
Athirady Tamil News

தாய் மற்றும் மகளை காவுவாங்கிய விபத்து; தந்தை மகள் மருத்துவமனையில்

0

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலி-எல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரொன்று மரத்தில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 71 வயதான தாயும் 51 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மற்றுமொரு மகளும் பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கம்பஹா, தொம்பேயில் இருந்து உறவினர் வீட்டிற்கு சென்றபோதே விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.