;
Athirady Tamil News

ஈரானை தாக்கினால்… இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரானிய அமைச்சர்

0

இன்னொரு முறை இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலின் ராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி நேற்றைய தினம் (15) ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலே கூறிய சர்ச்சைக்குரிய விடயத்திற்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

ஹெர்ஸி ஹலேவி கூறுகையில், “ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம், பிரதமர் நெதன்யாகுவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

எச்சரிக்கை விடுத்துள்ளார்
இதற்குப் பதிலளித்த ஈரானின் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி, “இன்னொரு முறை இஸ்ரேல் எங்களைத் தாக்கினால், நொடிகளில் பதிலடி கொடுக்கப்படும். அதுவும் இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களை உபயோகிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலின் கூற்றுப்படி, ஈரானுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் ஆனால் அது முழுமையான போருக்கு வித்திட்டுவிடக் கூடாது என்ற வகையில் போர் விவகாரங்களில் அமைச்சகம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீத தாக்குதலை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் அழித்தன.

3-ம் உலகம் போர்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ட்ரோன்களில் 80-ஐ அமெரிக்கா வீழ்த்தியதாகவும் ஈரான், ஏமனில் இருந்து ஏவப்பட்ட 6 ஏவுகணைகளை வீழ்த்தியதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்தத் தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது. அமைதியை நிலைநாட்டும் கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.