;
Athirady Tamil News

மில்லியன் கணக்கில் வருமானத்தை குவித்த தெஹிவளை விலங்கியல் பூங்கா!

0

தெஹிவளை விலங்கியல் பூங்கா சாதனை வருமானத்தை ஈட்டியுள்ளதாக பூங்காவின் செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இந்த வருடத்தின் முதல் 40 நாட்களில் 16,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும் இதன் மூலம் 52 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பார்வையாளர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவிலான பார்வையாளர்கள் தெஹிவளை விலங்கியல் பூக்காவிற்கு வருகை தந்துள்ளதாகவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.

விலங்கியல் பூங்கா
இதனுடன் ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் 4.85 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக விலங்கியல் பூங்கா உதவிப் பணிப்பாளர் தினுஷிகா மானவடு தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் 13 ஆம் திகதி 1.35 மில்லியன், ஏப்ரல் 14 ஆம் திகதி 1.65 மில்லியன் மற்றும் 13 ஆம் திகதி 1.85 மில்லியன் வசூலிக்கப்பட்டதாக அவர் தனியார் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.