;
Athirady Tamil News

இறந்தவரை வங்கிக்கு அழைத்து வந்து கடன்பெறமுயன்ற பெண் : வைரலாகும் காணொளி

0

மரணமடைந்த ஒருவரை வங்கிக்கு அழைத்துவந்து அவரது பெயரில் கடன்பெற முயன்ற பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.

68 வயதான மரணமடைந்த உறவினரை குறித்த பெண் சக்கர நாற்காலியில் வங்கிக்கு அழைத்து வந்துள்ளார்.

சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணை
இவ்வாறு அவரை அழைத்து வரும் போதே அவரது தலை தொங்கியிருந்துள்ளது.இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே உயிரிழந்தமை தெரியவந்தது.

இது தொடர்பான காணொளிசமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.