;
Athirady Tamil News

ஒரே நளில் 6 பெண்கள் உட்பட 775 பேர் கைது

0

நாடளாவிய ரீதியில் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 6 பெண்கள் உட்பட 775 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 18 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகவுள்ள 9 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின்போது 123 கிராம் ஹெரோயின் , 623 கிராம் ஐஸ் , 443 கிராம் கஞ்சா , 11 கிராம் ஹெரோயின் மற்றும் 75 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.