;
Athirady Tamil News

03 நாட்களில் 03 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

0

கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ X கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சார செயலிழப்புகள் மற்றும் மின்விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்காக மேலதிக பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.