;
Athirady Tamil News

கடவுள் தனது திட்டத்தை வெளிப்படுத்தாமல் என்னை செய்யவைக்கிறார்! மோடியின் அண்மை பேச்சு

0

ஒரு நோக்கத்திற்காக பரமாத்மா தான் என்னை அனுப்பியிருக்கிறார் என்று நம்புவதாக பிரதமர் மோடி மீண்டும் பேசியுள்ளார்.

மோடி பேசியது
ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “நான் பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார். ஏதாவது ஒரு விடயத்தை செய்து முடிக்க வேண்டும் என்று அனுப்பியுள்ளார்.

நான் பெற்றுள்ள ஆற்றல் சாதாரண மனிதன் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்” என்று கூறியிருந்தார்.

இவரின் கருத்துக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மீண்டும் தனியார் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த மோடி கடவுள் தான் என்னை அனுப்பியுள்ளார் என்று பேசியுள்ளார்.

அவர் அந்த பேட்டியில், “எனக்காக துஷ்பிரயோகம் செய்பவர்களையும், நல்ல விடயங்கள் செய்பவர்களையும் பார்க்கலாம். ஆனால், நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதை உறுதிசெய்வதே என் கடமை.

சிலர் என்னை கிரேஸியாக கூட நினைக்கலாம். ஆனால், ஒரு நோக்கத்திற்காக தான் பரமாத்மா என்னை அனுப்பியிருக்கிறார். கடவுளுக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறேன்.

பல வேலைகள் செய்வதற்கு கடவுள் எனக்கு வழிகாட்டுகிறார். கடவுள் அவரது திட்டங்களை வெளிப்படுத்தாமல் என்னை செய்ய வைக்கிறார். நான் அவருக்கு நேரடியாக போன் பண்ணவும் முடியாது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.