;
Athirady Tamil News

ஜூஸில் சிறுநீர் கலந்து விற்பனை..ஆத்திரத்தில் மக்கள் செய்த சம்பவம் – வைரல் வீடியோ!

0

ஜூஸில் சிறுநீர் கலந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூஸில்..
உத்தரபிரதேச மாநிலம் காசியாத் இந்திரபுரி பகுதியில் ஒரு ஜூஸ் கடை இயங்கி வருகிறது. அங்கு கடந்த வாரம், வாடிக்கையாளர் ஒருவருக்கு ஜூஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதன் சுவை வேறுவிதமாக இருந்ததால் வாடிக்கையாளர் விசாரித்துள்ளார். அப்போதுதான், ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது என தெரியவந்தது. இதனை அறிந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும்,

வைரல் வீடியோ
அங்கு வேலை பார்ப்பவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் இருவரையும் கைது செய்தனர்.

மேலும், கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.