;
Athirady Tamil News

சேற்றை வீசியது எந்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும்.., அமைச்சர் பொன்முடி விளக்கம்

0

தமிழக அமைச்சர் பொன்முடி மீது நேற்று சேறு வீசப்பட்டது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்

ஃபெங்கல் புயல் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தற்போது, புயல் கரையை கடந்த பின்னரும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் வடியவில்லை. இதனால், அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஆங்காங்கே, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார்.

அப்போது, அவர் மீது மக்கள் சேற்றை வீசிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் சாலைமறியலில் மக்கள் ஈடுபட்டனர்.

அவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் சென்றபோது சேறு வீசப்பட்டது. மேலும், அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சேறு வீசப்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அமைச்சர் பொன்முடியிடம் சேறு வீசப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “சேற்றை யார் அடித்தது என எல்லோருக்கும் தெரியும். எல்லோர் மீதும் சேறு பட்டது. வேண்டும் என்று அரசியல் செய்கின்றனர். அரசியல் செய்ய வேண்டும் என்று தான் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேற்றை வீசியது எந்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், எங்களுக்கு வெள்ள பாதிப்பை தடுக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக உள்ளது. பத்திரிக்கையாளர் எனக்காக புகாரளிக்க வேண்டும். நான் இதை அரசியலாக்க விரும்பவில்லை” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.