;
Athirady Tamil News

யாழில் கள் குடித்தவர் திடீர் மரணம்

0

யாழ்ப்பாணம் இளவாலை தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணையில் கள்ளு அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது சங்குவேலி தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 64 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் குறித்த தவறணையில் கள்ளினை குடித்தவேளை அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இளவாலை பொலிஸார் அவரது சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.