தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு போராட்டம் ஆரம்பமாகி மறுநாள் 13 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு நிறைவடையும். எனவே அனைத்து கட்சியினரையும் பொதுமக்களையும் ஆதரவாளர்களையும் சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேட்டுள்ளார்.