;
Athirady Tamil News

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் போராட்டம்

0

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு போராட்டம் ஆரம்பமாகி மறுநாள் 13 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு நிறைவடையும். எனவே அனைத்து கட்சியினரையும் பொதுமக்களையும் ஆதரவாளர்களையும் சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.