;
Athirady Tamil News

தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற லலீசனுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தில் கௌரவம்

0

இந்தியா தமிழ்நாடு ஆளுநர் விருதை பெற்றுக் கொண்ட சொற்பொழிவாளர் செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் சந்நிதியான் ஆச்சிரம சுவாமி கலாநிதி செ. மோகனதாஸ் அவர்களாலும் ஆச்சிரம தொண்டர்களாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இவ்வைபவம் 18.04.2025 வெள்ளிக்கிழமை ஆச்சிரம சுவாமி தலைமையில் இடம்பெற்றது. இதன் போது ஆச்சிரமத்தினர் சார்பில் பாராட்டுரையை சொல்லின் செல்வர் இரா செல்வ வடிவேல் நிகழ்த்தினார்.

ஆச்சிரம சுவாமி நினைவுச் சின்னம் கையளித்தார். ஆச்சிரமத் தொண்டர்களும் அடியவர்களும் லலீசனை பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கௌரவித்தனர்.

சொற்பொழிவாளர் லலீசன் 1998 ஆம் ஆண்டு பலாலி ஆசிரிய கலாசாலை மாணவனாக சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சந்நிதியான் ஆச்சிரமத்தில் முதன் முதலாக பொது வெளியில் தனது சொற்பொழிவை ஆரம்பித்து இன்று இந்த உயர் நிலையை அடைந்துள்ளார் என்று ஆச்சிரம சுவாமிகள் பாராட்டு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.