10 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம்

இலங்கையில் இன்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், இன்று (06) காலை 10:00 மணி வரையான நிலவரப்படி, மாவட்டங்கள் சிலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 20%ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இன்று மாலை 04 மணியளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம்
மன்னார் – 23%
பதுளை – 22%
கம்பஹா – 20%
களுத்துறை – 20%
நுவரெலியா – 20%
இரத்தினபுரி – 20%
ஹம்பாந்தோட்டை – 18%