;
Athirady Tamil News

கொழும்பு மாநகர சபையின் ஆட்சி யாருக்கு? பெரும்பான்மை இன்றி தவிக்கும் கட்சிகள்!

0

இலங்கையில் நேற்று இடம்பெற்ற (6) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியாகியுள்ளது.

இந் நிலையில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக, கொழும்பு மாநகர சபையின் பெரும்பான்மையை எதிர்க்கட்சிகள் கைப்பற்றியுள்ளன.

பெரிதும் பேசு பொருளாகியுள்ள கொழும்பு மாநகர சபை
117 உறுப்பினர்களை கொண்ட கொழும்பு மாநகர சபையில் 48 உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் பெரும்பான்மைக்கு தேவையான 69 உறுப்பினர்களைப் பெற்றுள்ளன.

எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 29 உறுப்பினர்களை வென்றுள்ளதோடு, ஆட்சியமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.

அதேபோன்று 48 உறுப்பினர்களை கொண்டுள்ள தேசிய மக்கள் சக்திக்கும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்ற ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது.

தற்போது பெரிதும் பேசும் பொருளாகியுள்ள கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போகும் கூட்டணி எதுவென்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.