உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியானது!
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வல்வெட்டித்துறை நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், பருத்தித்துறை நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம், காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவும் கைபற்றியுள்ளன.
அதோடு , நெடுந்தீவு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வேலணை பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும்,
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், பருத்தித்துறை பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், சாவகச்சேரி பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம்,
நல்லூர் பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன.
(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 88,443 வாக்குகள் – 135 உறுப்பினர்கள்
(NPP) தேசிய மக்கள் சக்தி – 56,615 வாக்குகள் – 81 உறுப்பினர்கள்
(ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 51,046 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்
(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 35,647 வாக்குகள் – 46 உறுப்பினர்கள்
(EPDP) ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 18,011 வாக்குகள் – 32 உறுப்பினர்கள்
(TMK) தமிழ் மக்கள் கூட்டணி – 11,893 வாக்குகள் – 15 உறுப்பினர்கள்
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 4,103 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
(IND2) சுயேட்சைக்குழு – 3,973 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
(UNP) ஐக்கிய தேசிய கட்சி – 3,397 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
(IND1) சுயேட்சைக்குழு – 2,402 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்