;
Athirady Tamil News

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

0

வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வட கொரியாவின் கிழக்கு துறைமுக நகரமான வோன்சன் பகுதியிலிருந்து வியாழக்கிழமை காலை 8.10 முதல் 9.20 மணி வரை பல ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டன. இந்த ஏவுகணைகளில் ஒன்று அதிகபட்சமாக 800 கி.மீ. தொலைவு பாய்ந்து கடலில் விழுந்தது.

இந்தச் சோதனைகளுக்கும், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு வட கொரியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கும் தொடா்பு இருக்கிா என்று ஆய்வு செய்யப்படுகிறது. ரஷியாவின் இஸ்காண்டா் ஏவுகணையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளின் செயல்திறனைச் சோதிக்க இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாா்ச் 10-ஆம் தேதிக்குப் பிறகு ஏவுகணை சோதனையில் வட கொரியா ஈடுபட்டுள்ளது இதுவே முதல்முறை. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஆறு முறை வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.