;
Athirady Tamil News

கலாசாலையில் கண் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கு

0

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கண் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் 15.05.2025 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலை கண் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர்.மு.மலரவன் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

ஆங்கிலநெறி ஆசிரிய மாணவர் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வை தினேஷ்.கௌசியா நெறிப்படுத்தினார். ஆசிரிய மாணவி டேவிட். லிஜானி அன்னையர் தின சிறப்புரையை ஆற்றினார்.
ஆசிரிய மாணவி தர்மினி சம்பத்குமார் டாக்டர். மு.மலரவன் குறித்த அறிமுக உரையை வழங்கினார்.

கலாசாலை முகாமைத்துவ குழுவினரால் டாக்டர்.மு.மலரவன் கௌரவிக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.