;
Athirady Tamil News

பாகிஸ்தானில் அணுக் கதிா்வீச்சு கசிவு இல்லை! சா்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு!

0

பாகிஸ்தான் அணுசக்தி மையங்களில் எவ்வித அணு கதிா்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என்று சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.

அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தன. இதையடுத்து, இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதலில் ஈடுபட்டது. இந்தியாவில் உள்ள ராணுவ மையங்கள் மீது ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இவற்றை இடைமறித்து இந்தியா அழித்தது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் அணுசக்தி மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, ஐஏஇஐ சாா்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஐஏஇஏ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

ஐஏஇஏ-வில் உள்ள விவரங்களின்படி பாகிஸ்தானில் உள்ள அணுசக்தி மையங்களில் எவ்வித அணு கதிா்வீச்சு கசிவும் ஏற்படவில்லை. அங்குள்ள அணுசக்தி மையங்களில் எவ்வித அசாதாரண சம்பவங்களும் நிகழவில்லை’ என்றாா்.

முன்னதாக இந்திய விமானப் படை ஏா் மாா்ஷல் ஏ.கே. பாா்தி இது தொடா்பாக அண்மையில் கூறுகையில், ‘பாகிஸ்தானின் கிரானா மலைப் பகுதியில் உள்ளிட்ட அந்நாட்டின் எந்த அணுசக்தி மையங்கள் எதையும் இந்தியா தாக்கவில்லை’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.