;
Athirady Tamil News

லக்மாலி ஹேமசந்திரவுக்கு புதிய பொறுப்பு

0

இலங்கை பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார்.

குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு இன்றையதினம் (22) பாராளுமன்றத்தில் கூடியபோது, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர பெயரை பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க முன்மொழிந்தார்.

அதனை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் வழிமொழிந்தார்.

இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.