;
Athirady Tamil News

வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த நபர் ; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

வாழைச்சேனை வைத்தியசாலையில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், சுங்கான்கேணி பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய நபராவார்.

காயமடைந்த நபர் வீதியில் விழுந்து கிடந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காயமடைந்தவர் விழுந்து கிடந்ததாக தெரிவித்த 18ஆம் கம்பம் பகுதிக்கு சென்று பொலிஸார் பரிசோதனை செய்தபோது, இச் சம்பவம் வாகன விபத்து காரணமாக நிகழ்ந்த விபத்து என விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.