கோர விபத்தை தடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய சாமானியனுக்கு கிடைத்த கௌரவம்

பாணந்துறை – மொரட்டுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற ரயில் குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்பே ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் மற்றும் ரயிலை மோதாமல் நிறுத்திய ஓட்டுநர் விதுர விதர்ஷன ஆகியோர் திங்கட்கிழமை (9)அன்று கௌரவிக்கப்பட்டனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.