;
Athirady Tamil News

இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – 3 பேர் உயிரிழப்பு

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு
சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மே மாத தொடக்கத்தில் 14,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின.

இதனால் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் கொரோனா பதற்றம் நிலவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயம் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலை என்ன?
இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 2000, குஜராத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேர் குணமடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.