;
Athirady Tamil News

வடகொரியா எப்போதும் ரஷ்யாவுடன் துணை நிற்கும்… புடினுக்கு மீண்டும் உறுதி அளித்த கிம்

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அனுப்பிய செய்தியில், தனது நாடு எப்போதும் ரஷ்யாவுடன் துணை நிற்கும் என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

உண்மையான உறவு
ரஷ்யாவின் சுதந்திரத்தைக் கொண்டாடும் ரஷ்யா தினத்திற்கான செய்தியில், கிம் புடினை தனது “அன்பான தோழர்” என்று அழைத்தார். மேலும் அவர்களின் இருதரப்பு உறவுகளை தோழர்களுக்கு இடையிலான உண்மையான உறவு என்று பாராட்டினார்.

வட கொரியா அரசாங்கத்தின் அசைக்க முடியாத விருப்பமும், வட கொரியா-ரஷ்யா உறவுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதும் என்னுடைய உறுதியான விருப்பமாகும் என்றும் கிம் குறிப்பிட்டுள்ளார்.

புதன்கிழமை கிம் ரஷ்ய தின வாழ்த்துக்களை புடினுக்கு அனுப்பியதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பல மாத மௌனத்திற்குப் பிறகு, கிம் ஜாங் உன்னின் உத்தரவின் பேரில், உக்ரைனில் நடந்த போரில் ரஷ்யாவுக்காகப் போராட துருப்புக்களை அனுப்பியதாக வடகொரியா முதன்முறையாக உறுதிப்படுத்தியது.

ஆனால், உக்ரைன் துருப்புகளிடம் வடகொரிய வீரர்கள் உயிருடன் சிக்கிய நிலையிலேயே அந்த நாடு அதை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.