;
Athirady Tamil News

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!

0

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று (24) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜூலை 7 ஆம் திகதி மீண்டும் விசாரணை
இதேவேளை, கொழும்பு வடக்கு குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள், உயிரிழந்த சிறுமியின் தாய், மூன்று பாடசாலை மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

விசாரணைக்குத் தேவையான பாடசாலையின் சிசிடிவி கெமராக்களின் டி.வி.ஆர் இயந்திரம், மற்றொரு விசாரணைக்காக பொது நிர்வாக அமைச்சகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் ஏற்பட்ட தாமதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதவான், உடனடியாக இயந்திரத்தைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதன் பின்னர் முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.