;
Athirady Tamil News

எரிமலையில் விழுந்து இறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ; 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட உடல்

0

பிரேசில் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மலை ஏறும் போது தடுக்கி விழுந்து உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவில் உள்ள ரிஞ்சானி மலையில் ஏறும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
26 வயதுடைய ஜூலியானா மரின்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த 21 ஆம் திகதி குறித்த விபத்து இடம்பெற்ற போதிலும், மூன்று நாட்களுக்குப் பின்னரே அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சடலம் மீட்கப்பட்ட பகுதி செங்குத்தான சரிவு மற்றும் மூடுபனி நிறைந்தது என்பதால் மீட்பு பணி நடவடிக்கைகள் தாமதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.