;
Athirady Tamil News

போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் புதிய முயற்சி

0

போக்குவரத்து நெரிசல் குறித்த கவலை அதிகரித்து வரும் நிலையில் முயற்சிகள் எடுக்கப்பட்டவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு புதிய தொடருந்து மார்க்கங்களை நிர்மாணிப்பதற்கும், நீண்டகாலமாகக் கைவிடப்பட்ட சுற்றுலா பாதையைப் புதுப்பிப்பதற்கும் அரசாங்கம் முன்மொழிவுகளை முன்வைக்கவுள்ளது.

நாட்டின் தொடருந்து உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் பொது போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கும் பரந்த உந்துதலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 100 தொடருந்து நிலையங்களை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ‘கனவு இலக்கு’ ​​திட்டத்தின் அங்குரார்ப்பண விழாவில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இரண்டு புதிய தொடருந்து மார்க்க திட்டங்களை அறிவித்தார்.

அதற்கமைய, கொட்டாவ – அவிசாவளைக்கு இடையில் தொடருந்து பாதையை சீரமைப்பதற்கும், தொடருந்து அவிசாவளையிலிருந்து தொடருந்து மார்க்கத்தை இரத்தினபுரி வரை நீடிப்பதற்குமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல் குறித்த கவலை அதிகரித்து வரும் நிலையில் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.