;
Athirady Tamil News

போகாத ஊருக்குப் பொய்யான வழி; AI காணொளியால் ஏமாந்த தம்பதி

0

மலேசியாவில் கம்பிவண்டிப் பயணம் செய்ய விரும்பிய தம்பதி ஏமாந்துபோன சம்பவம் இணையத்தில் பேசுபொலிருளாகியுள்ளது.

தம்பதி 300 கிலோமீட்டர் பயணம் செய்து கம்பி வண்டிச் சேவை எடுக்கும் தலத்தைச் சென்றடைந்தவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

எனெனில் ஆனால் அங்கே அப்படி ஒரு சேவையே இல்லையாம். பேராக், கெடா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையில் கம்பிவண்டிச் சேவை இருப்பதாக ஒரு காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தப் பொய்யான காணொளி TikTok, Facebook ஆகிய சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வந்ததாக கூறப்படுகின்றது.

அதை நம்பி அந்த இடத்திற்குச் சென்ற தம்பதியிடம் அது செயற்கை நுண்ணறிவைக்கொண்டு தயாரிக்கப்பட்ட காணொளி என்று ஹோட்டலில் பணியாற்றிய பெண் ஒருவர் தெரிவித்தார்.

அதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இணையத்தில் காண்பதை நம்பி ஏமாற வேண்டாம் என அங்குள்ள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.