;
Athirady Tamil News

யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கு டெங்கு தொடர்பில் விழிப்புணர்வு!

0
யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் சிவகரன்  தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின்  வைத்தியர் என்.பரமேஸ்வரன்  கலந்து கொண்டு டெங்கு  நோய்க்காரணி, டெங்கு நோய்க்கான அறிகுறிகள், டெங்கு நோகள், டெங்கு பரவும் இடங்கள் அதற்கான நோய்ய் ஏற்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கை தடுப்பு நடவடிக்கைகள், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பது, டெங்கு நோய்க்கான வைத்திய ஆலோசனைகள் என்பன தொடர்பில் கருத்துரைகளை வழங்கினார்.
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.