;
Athirady Tamil News

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது

0

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டைப் பகுதியில் போதை 05 மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பொலிஸார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் முடிவில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.