;
Athirady Tamil News

யாழில் தீடிரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; கடும் சந்தேகத்தில் வைத்தியர்கள்

0

யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பியோடி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

அழைத்து வந்தவர்கள் தப்பி ஓட்டம்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து அனுமதித்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் மயக்க நிலையில் இருந்து அவர் மீளவில்லை. குறித்த குடும்பஸ்தரின் தலை மற்றும் ஒரு கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. குறித்த காயம் பனையால் விழுந்ததுபோல் இல்லை என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.