;
Athirady Tamil News

நல்லூர் திருவிழாவுக்காக வந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த பெரும் துயரம்

0

நல்லூர் திருவிழாவுக்காக கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ். வந்த நபர் ஒருவர் கட்டிலில் உறங்கியவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் வசிக்கும் 52வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் வசிக்கும் இவர் நல்லூர் ஆலய திருவிழாவுக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு குடும்பமாக வந்து திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார்.

இவர் திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதன்போது நோயாளர்காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த நோயாளர்காவு வண்டி, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்து திரும்பிச் சென்றது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.