;
Athirady Tamil News

வாடகைக்கு நல்ல வீடு தேடும் மஹிந்த ராஜபக்க்ஷ!

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது.

தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி பொருத்தமான வாடகை வீட்டைத் மகிந்த ராஜபக்க்ஷ தேடி வருவதாக அறியப்படுகிறது.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகை
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற ஜனாதிபதி அனுர அரசாங்கம் தயாராகி வரும் பின்னணியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறித்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் ஓய்வு காலத்தைஉத்தியோகபூர்வ இல்லத்திற்கு கழிக்க உரிமை இல்லை.

மெதமுலானையில் உள்ள தனது வீட்டிற்கு அவர் செல்ல விரும்பினாலும், கொழும்புக்கு கணிசமான தூரம் பயணிப்பதில் சிரம ஏற்படும்.

இந்நிலையில் அவரது மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமத்தையும் கருத்தில் கொண்டுமகிந்த ராஜபக்க்ஷ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.