;
Athirady Tamil News

போயிங் விமானத்தில் தீ விபத்து! நூலிழையில் தப்பிய 280 பேர்!

0

கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு சென்று கொண்டிருந்த போயிங் 757 ரக விமானம், புறப்பட்ட ஒரு மணிநேரத்துக்குள் நடுவானில் அதன் வலதுபுற என்ஜினில் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து, விமானம் அவசரமாக இத்தாலியின் பிரின்டிசியில் தரையிறக்கப்பட்டதால், விமானத்தில் இருந்த 273 பயணிகள், 8 விமான ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விமானத்தின் மீது பறவை ஏதேனும் மோதியதில் ஏற்பட்ட இயந்திர செயலிழப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.