;
Athirady Tamil News

புடினைத் தடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும்: உக்ரைன் அதிபர்

0

ரஷியாவைத் தடுத்து நிறுத்த ஐ. நா. நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும் என்று உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய ஸெலென்ஸ்கி, “உலகம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான மிகவும் அழிவை உண்டாக்கூடிய ஆயுதங்களுக்கான போட்டியில் உள்ளது. ரஷியாவை இப்போதே தடுத்துநிறுத்த ஐ. நா. கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல், ஐரோப்பாவுக்கும் போரை விரிவுபடுத்த புடின் முற்படுவார்” என்று எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.