;
Athirady Tamil News

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிவிப்பு

0

அமெரிக்காவிலும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் தொடரும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிடப்பட்ட ஒரு பதிவில்,

ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டாலும் முழு செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் வரை அவசர பாதுகாப்பு தகவல்கள் மட்டுமே பகிரப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், தூதரக சேவைகள் மற்றும் செயல்பாட்டு நிலை குறித்த புதுப்பிப்புகள் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான [ travel.state.gov ]( http://travel.state.gov ) இல் கிடைக்கின்றன என்றும் அமெரிக்க தூதரகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.