;
Athirady Tamil News

மாஸ்கோ வரை பாயும் Tomahawk ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன் ; ரஷ்யாவை மிரட்டும் ட்ரம்ப்

0

உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்ப நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “பாருங்கள், இந்தப் போர் தீர்க்கப்படாவிட்டால், நான் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன். டோமாஹாக் ஒரு அற்புதமான ஆயுதம், ரஷ்யா நிச்சயமாக இதை விரும்பவில்லை” என்று கூறினார்.

ட்ரம்ப் எச்சரிக்கை
டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்த முன்னாள் ரஷ்ய அதிபரும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், “உக்ரைனுக்கு டோமாஹாக்ஸ் வழங்கப்பட்டால், அது அனைவருக்கும், குறிப்பாக டிரம்பிற்கு ஒரு பிரச்சனையாக இருக்கும்.

இது ரஷ்யாவிற்கு அருகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவது போன்ற மற்றொரு வெற்று அச்சுறுத்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணை மூலம் உக்ரைன் ரஷிய தலைநகர் மாஸ்கோவை எளிதில் தாக்க முடியும்.

இந்த ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி வேண்டி அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை வைத்துள்ள நிலையில் டிரம்ப் உடைய கருத்து வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.