கிளிநொச்சி பஸ் தரிப்பிடத்தில் இளம் பெண்ணின் சடலம்
கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்குப் பின்னால் பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.