;
Athirady Tamil News

மத்ரஸாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு; ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

0

பதுளையில் வெலிமடை பிரதேசத்தில் உள்ள மத்ரஸா ஒன்றின் குளியலறையில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 03 ஆம் திகதி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அப்பிரதேச மக்கள் நேற்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்
12 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில், சிறுவனின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறி, அப்பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், சிறுவனின் மரணம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.