பாணந்துறை பிரதேச சபை அமர்வில் அமளிதுமளி!
பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
சபை உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு அமைய ஆசனங்கள் முறையாக ஒதுக்கப்படவில்லை எனக் கூறி ஏற்பட்ட பிரச்சினை ஒன்றே அமளி துமளிக்கு தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பாணந்துறை பிரதேச சபைத் தவிசாளர் தர்மசிறி பெரேரா தலைமையில் மற்றும் செயலாளர் நுவன் பெர்னாண்டோவின் பங்குபற்றுதலுடன் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.