;
Athirady Tamil News

யாழில் கள்ளுத்தவறணையில் இளைஞர்கள் செய்த கொடூர செயல் ; பொலிஸார் வலைவீச்சு

0

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் நேற்று (19) முதியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த முதியவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நேற்றையதினம் தவறணைக்கு செற்றுள்ளார். இதன்போது அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் அவரை கீழே தள்ளி விழுத்தி கொடூரமாக தாக்கினர்.

தப்பி ஓட்டம்
இந்நிலையில் மூச்செடுக்க சிரமப்பட்ட முதியவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதால் சிகிச்சை அளிப்பது சிரமம் எனக்கூறி திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் குறித்த முதியவர் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

தாக்குதலை மேற்கொண்ட இரண்டு இளைஞர்களும் தப்பி சென்ற நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.