;
Athirady Tamil News

நாய் மற்றும் பூனை இறைச்சிக்கு தடை விதித்த நாடு

0

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் ரேபிஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நகர ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த தடை ஜகர்த்தா ஆளுநர் பிரமோனோ அனுங் விபோவோவால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் நாய் இறைச்சியை ஒழிப்பதற்கான ஆர்வலர் குழு இந்த நடவடிக்கையை வரவேற்று, இந்தக் கொள்கை “அனைத்து இந்தோனேசிய மக்களை பாதுகாப்பதற்கும், நீதியான மற்றும் நாகரிகமான தேசமாக மாறுவதற்கும் உதவும்” என்று தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.