உடனடியாக வெளியேறுங்கள் ; ஒரு பகுதி மக்களுக்கு அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை
அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் இருபுறமும் வசிக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் இடத்தினைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.