;
Athirady Tamil News

பெரும் துயரம்; குழந்தையுடன் நித்திரைக்கு சென்ற ஆசிரியை மண்சரிவில் உயிரிழப்பு; மகன் எங்கே?

0

கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோமாகம – மாகம்மன மகா வித்தியாலயத்தின் பொறுப்பாசிரியை புபுது மஹேஷிகா பண்டார இன்று (29) ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்துள்ளார்.

கோத்மலை பம்போடாவில் ஆசிரியை மற்றும் அவரது மகன் வசித்து வந்த வீடு உட்பட மேலும் 5 வீடுகள் உள்ளன. ஆசிரியை தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆசிரியை புபுது மஹேஷிகாவின் உடல் சில நிமிடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மகனை இன்னும் காணவில்லை என கூறப்படுகின்றது.

இலங்கையில் இயற்கையின் கோர தாண்வத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், காணாமல்போனோர் எண்னைக்கையும் அதிகரித்து வருகின்றமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.