;
Athirady Tamil News

மாவிலாறு அணையால் அபாயம் ; திருகோணமலையின் பல பகுதிகள் நீரில்

0

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று காலை (30) உடைந்துள்ளது

மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான நிலையில் உடைந்த நிலையில் மூதூர், வெருகல், சேருவில கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து முற்றாக தடை
மகாவலி ஆற்றில் அதிக நீர் ஓட்டம் மற்றும் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக, மாவிலாறு நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி ஒரே நீர்த்தேக்கமாகக் காணப்பட்டது.

மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் . பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் நீர்ப்பாசன இயக்குநர் நாயகம் கேட்டுக்கொள்கிறார். கடற்படையினர் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாலத்திற்கு அருகாமையில் உள்ள முறிஞ்சாறு உடைப்பு எடுத்தன் காரணமாக மூதூர் பயணம் உப்பாறு பாலம் வழியாக போக முடியாமல் தடைப்பட்டுள்ளது. வெருகல் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

ஈச்சிலம்பற்று வைத்தியசாலை பாதிக்கப்பட்டுள்ளது. கங்குவேலி பாடசாலை மற்றும் முத்துவிநாயகர் விவசாய சம்மேளன கட்டிடம் முமுமையாக நீரில் மூழ்கி உள்ளன.

மூதூர் – இறால் குழி , நாவலடி பிரதேச மக்களை இராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர் இவர்கள் அந்- நஹார் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சாபிநகர், வேதத்தீவு மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மகாவலி கங்கை பெருக்கெடுப்பால் மாவிலாறு அணை உடைந்ததால் மூதூர், வெருகல், சேருவில மக்களின் வயல்கள், வீடுகள், கால் நடைகள் அழிவடைந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.