;
Athirady Tamil News

குஜராத்தில் பாலக் கட்டுமானம் இடிந்து விழுந்தது: 5 பேர் காயம்!

0

குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் கட்டுமானத்திலிருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரஞ்ச் நதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியைச் சமன் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது பாலத்தின் ஒருபகுதி இடிந்துவிழுந்தது.

இந்த சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் நடைபெற்றது. பாலத்தின் இடிந்துவிழுந்த பகுதியில் சிக்கி ஐந்து தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் ஐந்து பேரும் நிலையாக இருப்பதாக வல்சாத் மாவட்ட ஆட்சியர் பவ்யா வர்மா தெரிவித்தார்.

பாலம் ரூ. 45 கோடியில் கட்டப்பட்டு வருவதாகவும், அதற்கான ஒப்புதல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதாகவும், இது இன்னும் ஒரு வருடத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அதிகாரி கூறினார்.

சரியான காரணத்தைத் தீர்மானிக்க ஒரு குழு அமைக்கப்படும், மேலும் விசாரணையின் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.