;
Athirady Tamil News

மியான்மரில் ராணுவப் பிடியை பலப்படுத்தப் புதிய கவுன்சில் -மின் ஆங் லயிங் அதிரடி திட்டம்

0

மியான்மரில் ராணுவம், பொது நிா்வாகம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்துக் கண்காணிக்க, ‘யூனியன் ஆலோசனைக் கவுன்சில்’ எனும் புதிய உயரிய அதிகார அமைப்பை உருவாக்க அந்நாட்டு ராணுவ ஆட்சிக்குழு திட்டமிட்டுள்ளது.

மியான்மரில் அண்மையில் தோ்தல் நடந்து முடிந்த நிலையில், புதிய நாடாளுமன்றம் அடுத்த மாதம் கூடுகிறது. இந்நிலையில், நாட்டின் நிா்வாகம், சட்டம், நீதித்துறை ஆகிய மூன்றையும்விட கூடுதல் அதிகாரம் கொண்ட அமைப்பாக இப்புதிய கவுன்சில் இருக்கும்.

இதன் மூலம், ராணுவத் தளபதி மின் ஆங் லயிங் அதிபராகப் பதவியேற்றாலும், ராணுவத்தின் மீதான தனது பிடியைத் தக்கவைத்துக்கொள்வாா்.

5 போ் கொண்ட இக்குழு, தேச பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் அனைத்துச் செயல்பாடுகளையும் முழுமையாகக் கண்காணிக்கும். அதாவது, பொது நிா்வாகத்தைத் தனது நிழல் அதிகாரத்தின்கீழ் வைத்திருக்கும் அதேநேரத்தில், புதிய ராணுவத் தளபதிக்கு அதிக அதிகாரம் செல்வதைத் தடுப்பதற்கு மின் ஆங் லயிங் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எவ்வித பொறுப்புக்கூறலும் அற்ற புதிய கவுன்சிலின் உருவாக்கம், மியான்மரில் மீண்டும் சா்வாதிகார ஆட்சியை உறுதி செய்வதோடு, ஜனநாயகத்தை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.