;
Athirady Tamil News

யாழில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

0

வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்களை ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இரு வாள்கள் மற்றும் ஒரு அபாயகரமான கோடாரி உட்பட சில பொருட்களும் கைதானவர்களிடம் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இந் நிலையில் மேலதிக விசாரணைகள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.